Posts

மாரடைப்பு உடற்பயிற்சிகள்

 உடற்பயிற்சிகள் ♡ தியானம் ♡ மூச்சிபயிற்சி மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி : ♡ சிறந்த மருத்துவ உதவி கிடைக்கும் வரை, நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும். ♡ ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். 

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள் ♡ மாரடைப்பு என சந்தேகித்ததும் மருத்துவரால் செய்யப்படும் முதலுதவி, நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுப்பது, ஆஸ்பிரின் மாத்திரை தருவது, நாக்கின் அடியில் வைக்கப்படும் மாத்திரை தருவது. நெஞ்சு வலியும், மனப்பதட்டமும் குறைய மருந்துகள் இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.  ♡ இருதய துடிப்பு அதிவேகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கும் போது செய்யப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறை மூலம் மட்டுமே மாரடைப்பால் ஏற்படும் வலியை குறைக்கலாம். ♡ மாரடைப்பின் தாக்கத்தையும், தீவிரத்தையும் கட்டுப்படுத்தலாம். உரிய நேரத்தில் முதலுதவி பெறுவதால், மாரடைப்பால் நேரும் திடீர் மரணங்களை தவிர்க்கலாம்.

மாரடைப்பு வராமல் தடுக்கும் முறைகள்

 மாரடைப்பு வராமல் தடுக்கும் முறைகள்  ♡ உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும், உப்பு & கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் & நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.  ♡ அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் வேண்டும்.  ♡ புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும். ♡ உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் வேண்டும்.

மாரடைப்பு ஏற்படக் காரணங்கள்

மாரடைப்பு ஏற்படக் காரணங்கள் ♡ புகைப்பிடித்தல்  ♡ சர்க்கரை நோய்  ♡ உயர் இரத்த அழுத்தம்  ♡ அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்  ♡ அதிக கொலஸ்ட்ரால்  ♡ குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு இருத்தல்  ♡ மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு  ♡ மரபியல் காரணிகள்  ♡ உடல் உழைப்பு இல்லாமை. - இந்த அறிகுறிகள் இருப்பின், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

தட்டம்மை

தட்டம்மை  ♡ வைரசால் உண்டாகும் தட்டம்மை மிகவும் பரவக் கூடியது ஆகும். இது மணல்வாரி என்றும் அழைக்கலாம். ♡ இது வைரசால் (குறிப்பாக பாரோமைக்சோ வைரஸ்) உண்டாகும் ஒரு மூச்சு மண்டலத் தொற்று நோயாகும்.  ♡ நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், தொண்டைச்சளியின் மூலமாக இது பரவுகிறது.  காரணங்கள் : ♡ இந்த வைரஸ், ஒற்றை இழையும், எதிர் - உணர்வும், ஆர்.என்.ஏ. பொதிந்த வைரசுமாகும். பாரோமைக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த மார்பிலிவைரஸ் இனத்தைச் சார்ந்தது.  ♡ இந்த வைரசின் இயற்கையான ஓம்புயிரி மனிதர்கள் ஆவர். - இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். 

சின்னம்மை

சின்னம்மை  ♡ வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன.  சின்னம்மை ஏற்படக் காரணங்கள் : ♡ வளிமண்டலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், உடலில் வெப்பம் ஏற்படுகிறது.  ♡ உடல் வெப்பத்துக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. ♡ இவற்றில் ஒன்றுதான் ஷவேரிசெல்லா ஜாஸ்டர் எனும் வைரஸ் கிருமி மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.  சின்னம்மை வராமல் தடுக்கும் முறைகள் : ♡ குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், 5 வயதில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும். ஆரம்பத்திலேயே இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் 13 வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால், மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ளலாம். ♡ ஒரு தவணையை மட்டும் போட்டுக்கொண்டு, அடு...

ஆஸ்துமா நோயாளிகளுக்கான உடற்பேணல் முறைகள்

ஆஸ்துமா நோயாளிகளுக்கான உடற்பேணல் முறைகள் ♡ ஆஸ்துமா நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டுடன் சில உடற்பேணற் முறைகளையும் கையாள வேண்டும். ♡ உடலுக்குக் குளர்ச்சி தரும் தைல வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது. ♡ வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதை அறவே விட்டுவிட வேண்டும். ♡ வாசனை ஊதுபத்திகள், வாசனை தரும் சோப்புகள், வாசனை தரும் மலர்கள் ஆகியவற்றின் உபயோகத்தினை குறைத்துவிட வேண்டும். ♡ தலைமுடிக்கு சாயமிடுபவர்கள் முற்றிலுமாக அப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.  ♡ முகப்பூச்சு கிரீம்கள், வாசனை மிக்க சேவிங் லோசர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ♡ தலைக்கு குளித்த அன்று கண்டிப்பாக பத்தியம் காக்க வேண்டும். மந்தமான உணவுகளையும் வாயுவை மிகுதிப்படுத்தும் உணவு வகைகளையும் அறவே நீக்க வேண்டும்.