Posts

Showing posts from January, 2022

மாரடைப்பு உடற்பயிற்சிகள்

 உடற்பயிற்சிகள் ♡ தியானம் ♡ மூச்சிபயிற்சி மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி : ♡ சிறந்த மருத்துவ உதவி கிடைக்கும் வரை, நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும். ♡ ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். 

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள் ♡ மாரடைப்பு என சந்தேகித்ததும் மருத்துவரால் செய்யப்படும் முதலுதவி, நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுப்பது, ஆஸ்பிரின் மாத்திரை தருவது, நாக்கின் அடியில் வைக்கப்படும் மாத்திரை தருவது. நெஞ்சு வலியும், மனப்பதட்டமும் குறைய மருந்துகள் இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.  ♡ இருதய துடிப்பு அதிவேகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கும் போது செய்யப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறை மூலம் மட்டுமே மாரடைப்பால் ஏற்படும் வலியை குறைக்கலாம். ♡ மாரடைப்பின் தாக்கத்தையும், தீவிரத்தையும் கட்டுப்படுத்தலாம். உரிய நேரத்தில் முதலுதவி பெறுவதால், மாரடைப்பால் நேரும் திடீர் மரணங்களை தவிர்க்கலாம்.

மாரடைப்பு வராமல் தடுக்கும் முறைகள்

 மாரடைப்பு வராமல் தடுக்கும் முறைகள்  ♡ உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும், உப்பு & கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் & நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.  ♡ அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் வேண்டும்.  ♡ புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும். ♡ உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் வேண்டும்.

மாரடைப்பு ஏற்படக் காரணங்கள்

மாரடைப்பு ஏற்படக் காரணங்கள் ♡ புகைப்பிடித்தல்  ♡ சர்க்கரை நோய்  ♡ உயர் இரத்த அழுத்தம்  ♡ அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்  ♡ அதிக கொலஸ்ட்ரால்  ♡ குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு இருத்தல்  ♡ மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு  ♡ மரபியல் காரணிகள்  ♡ உடல் உழைப்பு இல்லாமை. - இந்த அறிகுறிகள் இருப்பின், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

தட்டம்மை

தட்டம்மை  ♡ வைரசால் உண்டாகும் தட்டம்மை மிகவும் பரவக் கூடியது ஆகும். இது மணல்வாரி என்றும் அழைக்கலாம். ♡ இது வைரசால் (குறிப்பாக பாரோமைக்சோ வைரஸ்) உண்டாகும் ஒரு மூச்சு மண்டலத் தொற்று நோயாகும்.  ♡ நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், தொண்டைச்சளியின் மூலமாக இது பரவுகிறது.  காரணங்கள் : ♡ இந்த வைரஸ், ஒற்றை இழையும், எதிர் - உணர்வும், ஆர்.என்.ஏ. பொதிந்த வைரசுமாகும். பாரோமைக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த மார்பிலிவைரஸ் இனத்தைச் சார்ந்தது.  ♡ இந்த வைரசின் இயற்கையான ஓம்புயிரி மனிதர்கள் ஆவர். - இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். 

சின்னம்மை

சின்னம்மை  ♡ வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன.  சின்னம்மை ஏற்படக் காரணங்கள் : ♡ வளிமண்டலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், உடலில் வெப்பம் ஏற்படுகிறது.  ♡ உடல் வெப்பத்துக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. ♡ இவற்றில் ஒன்றுதான் ஷவேரிசெல்லா ஜாஸ்டர் எனும் வைரஸ் கிருமி மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.  சின்னம்மை வராமல் தடுக்கும் முறைகள் : ♡ குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், 5 வயதில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும். ஆரம்பத்திலேயே இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் 13 வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால், மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ளலாம். ♡ ஒரு தவணையை மட்டும் போட்டுக்கொண்டு, அடு...

ஆஸ்துமா நோயாளிகளுக்கான உடற்பேணல் முறைகள்

ஆஸ்துமா நோயாளிகளுக்கான உடற்பேணல் முறைகள் ♡ ஆஸ்துமா நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டுடன் சில உடற்பேணற் முறைகளையும் கையாள வேண்டும். ♡ உடலுக்குக் குளர்ச்சி தரும் தைல வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது. ♡ வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதை அறவே விட்டுவிட வேண்டும். ♡ வாசனை ஊதுபத்திகள், வாசனை தரும் சோப்புகள், வாசனை தரும் மலர்கள் ஆகியவற்றின் உபயோகத்தினை குறைத்துவிட வேண்டும். ♡ தலைமுடிக்கு சாயமிடுபவர்கள் முற்றிலுமாக அப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.  ♡ முகப்பூச்சு கிரீம்கள், வாசனை மிக்க சேவிங் லோசர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ♡ தலைக்கு குளித்த அன்று கண்டிப்பாக பத்தியம் காக்க வேண்டும். மந்தமான உணவுகளையும் வாயுவை மிகுதிப்படுத்தும் உணவு வகைகளையும் அறவே நீக்க வேண்டும்.

ஆஸ்துமா நோய் உணவு முறைகள்

உணவு முறைகள்  சேர்க்கவேண்டிய உணவுகள் : ♡ எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவையே ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டும். அதாவது இட்லி, இடியாப்பம், புட்டு, ஆப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது.  ♡ ஆஸ்துமா நோயாளிகள் பகல் நேரத்தில் மட்டும் மோர் சாதம் சாப்பிடலாம். மோரில் கொஞ்சம் மிளகைக் கலந்து சாப்பிட வேண்டும். ♡ வயிற்றுப் புண் பிரச்சினை உள்ள நோயாளிகள் மிளகுக்குப் பதிலாக மஞ்சள்தூள் கலந்த மோரை ஊற்றி பகலில் சாதம் சாப்பிடலாம். ♡ உலர் கொடி முந்திரியுடன் சில வகை உலர் பழ வகைகளை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ♡ முசுமுசுக்கைக் கீரை மிகவும் நல்லது. ♡ வேகவைத்த காய்கறிகளுடன் கோதுமை ரொட்டி அல்லது சப்பாத்தியை மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். ♡ சமைக்கப்படாத காய்கறிகளால் ஆன சாலட் வகைகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.  ♡ இரவு உணவை உரங்கச் செல்வதற்கு 2 மணி நேத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளவும். ♡ ஆஸ்துமா நோயாளிகள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடிப்பது அவசியம். தவிர்க்கவேண்டிய உணவுகள் : ♡ பரோட்டா, பிரியாணி போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ♡...

ஆஸ்துமா நோய் வந்தபின் காக்கும் முறைகள்

ஆஸ்துமா நோய் வந்தபின் காக்கும் முறைகள்  ♡ மருத்துவர் அறிவுரையோடு இன்ஹேலர் தெரப்பி மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ♡ சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். ♡ தொடர்ந்து அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். ♡ ஏசி அளவை நார்மலாக வைத்திருக்க வேண்டும். அறைக்கு வெளியே உள்ள வெப்ப நிலையைவிட, அறையில் அதீத குளிரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். ♡ சுத்தமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டில் கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ♡ இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மெட் அணிய வேண்டும், அல்லது மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும். ♡ தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தூசு அதிகம் இருந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். ♡ சிகரெட் பிடிக்கவும் கூடாது; சிகரெட் புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.

ஆஸ்துமா நோய் வராமல் காக்கும் முறைகள்

 ஆஸ்துமா நோய் வராமல் காக்கும் முறைகள்  ♡ தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகளுக்கு 6 வயது வரை ஆஸ்துமா நோய் தாக்காமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ♡ சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம். ♡ குளிர்பானங்கள், ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ♡ தூசி இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும். ♡ படுக்கை அறையை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். குறிப்பாக தலையணை உறை, பெட்ஷிட் ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும். ♡ வீட்டில் தூசி படியவிடாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசிகளை அகற்றும்போது முகத்தில் மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும். ♡ வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் ஒவ்வாமை இருந்தால் அந்த பிராணியை முடிந்த வரையில் தனி அறையில் வைத்திருக்க வேண்டும். அதன் அருகில் செல்ல கூடாது. ♡ வருடம் ஒருமுறை சுவாச பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ♡ எந்த பொருளால் அலர்ஜி ஏற்பட்டாலும் அதனை தவிர்க்க வேண்டும். - மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

ஆஸ்துமா நோய்

ஆஸ்துமா நோய்  ♡ ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும்.  ♡ சுவாசக குழாய்கள் சுருங்குவதால், அதன் வழியாக காற்று சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகமாகக் காணப்படும். ஆஸ்துமா நோயினால் பெரும்பாலும் 3 முதல் 7 வயது வரை உள்ள நகர்ப்புறக் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். ♡ ஆஸ்துமா ஏற்படும்போது மூச்சுக்குழாய்களின் உட்புறப் படலம் வீக்கம் அடையும். முக்கிய காரணங்கள் : ♡ சிகரட் புகை  ♡ கயிறுகள், மரத்தூள் ♡ செல்லப் பிராணிகளின் முடி ♡ சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு ♡ அடிக்கடி மாறும் காலநிலை ♡ மன அழுத்தம் ♡ வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை ♡ சளித்தொல்லை ♡ தும்மல் பிரச்சனை ♡ பரம்பரை காரணம்

வயிற்று வலி வந்தபின் காக்கும் முறைகள்

 வயிற்று வலி வந்தபின் காக்கும் முறைகள் ♡ வயிற்று வலி பெரும்பாலும் ஜீரண சக்தி குறையும் போதுதான் அது வெளிப்படும்.  ♡ வலி ஏற்பட்டவுடன் குறைந்தது 250 மி.லி. அளவு தண்ணீர் அருந்தினால் அஜீரணத்தால் வலி ஏற்பட்டிருந்தாள் குணமாகும்.  ♡ இளநீர், புளிப்பில்லாத மோர், குளிர்ந்த குடிநீர் அல்லது குளிர்ச்சியான பானங்களை அருந்த வேண்டும். - இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். 

வயிற்று வலி வராமல் தடுக்கும் முறைகள்

 வயிற்று வலி வராமல் தடுக்கும் முறைகள் ♡ ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட, சிறு சிறு இடைவெளிகளில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி ஏற்படாமல் தடுக்கலாம். ♡ உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் உணவு செரிமானம் அடைவதோடு, உடல் எடையும் குறையும். வேகமாக சாப்பிட்டால் உடலில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, வலி ஏற்படும்.  ♡ உணவை சரியான அளவில் சாப்பிட்டு, அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ♡ வயிற்றுப்புண், மாதவிடாய் உட்பட எல்லா வயிற்று வலிகளுக்கும் ஒரு கண்ணாடி பாட்டிலில் வெந்நீரை நிரப்பிக்கொண்டு, அதை ஒரு துணியால் சுற்றிக்கொண்டு, வயிற்றில் ஒத்தடம் தரலாம். ♡ இரைப்பை அழற்சி அல்லது செரிமானக்குறைபாடு இருந்தால், வயிற்று வலியுடன் புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம் இருக்கும்.

வயிற்று வலி

 வயிற்று வலி  வயிற்று வலி என்றால் என்ன? ♡ வயிற்று வலி பொதுவான நோயாகும். பெரும்பாலான நேரங்களில் இது ஆபத்தில்லாதது போல தோன்றும். ஆனால், சில கடுமையான நோய்களுக்கு இது அறிகுறியாக அமையும்.  காரணங்கள் : ♡ வயிற்றில் குடல்புண், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, செரிமான குறைபாடு, நச்சுணவு, இரைப்பைப் புண், இரைப்பை அழற்சி, குடல் புழுத்தொல்லை, குடல் அழற்சி, குடல் வால் அழற்சி, குடல் அடைப்பு, மாதவிடாய், மலச்சிக்கல், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை அழற்சி மற்றும் பித்தப்பைக் கற்கள் போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்றுவலி ஏற்படும். ♡ மேல் வயிற்றில் வலி உண்டானால், அது இரைப்பைப் புண் அல்லது இரைப்பை அழற்சி காரணமாக இருக்கும்.  ♡ இரவு நேரத்தில் மட்டும் வயிற்றுவலி வந்தால் அதற்கு குடல்புழு காரணமாகும். 

முதுகு வலி

 முதுகு வலி ♡ நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகுவலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப் பிரச்சனை. முதுகுவலி ஏற்பட காரணம் என்ன? முதுகுவலியை எப்படி குணப்படுத்துவது இதுபோன்ற பல கேள்விகள் நம்முள் இருக்கின்றன. இதற்கானத் தீர்வுகளை இங்கு காண்போம். முதுகுவலி ஏற்படக் காரணங்கள் : ♡ அதிக அளவு எடையுள்ள பொருள்களை தூக்கும் போது முதுகுத் தண்டு மற்றும் தசைகளில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலர் வேலைசெய்யும் பொழுது தவறான முறையில், ஒரே கைகளில் எடையைத் தூக்கி கொண்டு செல்வார்கள். இதனால் முதுகு வலி ஏற்படலாம்.  ♡ பெண்கள் ஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணிவதால், இடுப்புத் தசை அழுத்தப்பட்டு அடிமுதுகில் வலி ஏற்படுகிறது.  ♡ செரிமானக் கோளாறு, குடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்த்தால் முதுகுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ♡ பல மணி நேரம் தொடர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், முதுகுத் தண்டுவடத்தின் நெகிழ்வுத்த...

கால் வலி

கால் வலி 👣 பழங்காலத்தில் நம் முன்னோர்கள் கால் வலியோ, மற்ற நோய்களே அவர்களை தாக்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். இதற்கு காரணம் என்னவென்றால், நம் முன்னோர்கள் உணவாக எடுத்துக்கொண்ட சத்தான உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் தான். ஆனால், இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவினை இழந்து கால் வலியாலும், பெயர் தெரியாத பலவகை நோயாலும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் கால் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அதிகமான உயரம் கொண்ட காலணிகளை அணிவதால் இடுப்பு வலியுடன், கால் வலிகளும் ஏற்படுகின்றன. கால் வலியைப் போக்குவதற்கான எளிய வழிமுறைகள் : 👣 விரைவில் கால் வலி மற்றும் கால் சோர்வை குணப்படுத்த தேன் மற்றும் எலுமிச்சைச் சாற்றை, ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் குடிக்க வேண்டும். 👣 முழங்கால்களில் வலி ஏற்படும் போது, அந்த இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து 10 முதல் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் முழங்கால் வலிகள் முற்றிலும் குணமாகும். 👣 தூங்கும் போது கால்களுக்கு அடியில் தலையணை வைத்து தூங்குவதன் மூலம் ...

குதிகால் வெடிப்பை போக்க எளிய டிப்ஸ்

 குதிகால் வெடிப்பை போக்க எளிய டிப்ஸ் ♡ ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குதிகாலைத் தேய்க்க வேண்டும். ♡ அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். ♡ விளக்கெண்ணெயில் தேவையான சுண்ணாம்பைக் கலக்கி வைத்துக் கொண்டு குதிகால் வெடிப்புகளில் அடிக்கடி தடவி வந்தால் குதிகால் வெடிப்பு குணமாகிவிடும். ♡ கிளிசரின், ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைத்து கழுவ வேண்டும். ♡ குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்

 குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள் ♡ வீட்டில் உள்ள போதும், உறங்கச்செல்லும் முன்பும், ஈரப்பதமூட்டும் பசைபொருட்களை கால்களில் பூசிக்கொள்ளுதல். ♡ இரவு முழுவதும் காலில் ஈரப்பதம் உள்ள வண்ணம் வைத்திருத்தல். இரவு நேரத்தில் கால் உறைகளை அணிந்து கொள்ளுதல். ♡ தடிமனான தோலினாலான ஷூக்களை அணிவதை தவிர்க்கவும். கால்களை ஒழுங்காக தவறாமல் ஈரப்படுத்துவது. ♡ அதிக அதிர்வுகளை இழுத்துக்கொள்ளும் ஷூக்களை அணிவது நிலைமையை மேம்படுத்த உதவும். குறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்துவது மற்றும் உறங்கும் போது ஈரக்கால்களுக்கு மேல் கால் உறைகளை அணிவது.

குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கும் வழிகள்

 குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கும் வழிகள் ♡ காலணிகள் இன்றி செல்வது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது. தடிமனான தோலினாலான ஷூக்களை அணிவதை தவிர்க்க வேண்டும். ♡ அதிக அதிர்வுகளை இழுத்துக்கொள்ளும் ஷூக்களை அணிதல். குறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்த வேண்டும். ♡ உறங்கும் போது ஈரக்கால்களுக்கு மேல் கால் உறைகளை அணிந்து கொள்ள வேண்டும். ♡ குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும்.

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்பு  ♡ குதிகால் வெடிப்பு இது ஒரு எளிய சருமப்பிரச்சனையாகும். பாதம், பாதத்தின் விளிம்புப்பகுதியில் உள்ள தோல் உறிந்து தகடுகள் போல் ஏற்படுவதால் குதிகால் வெடிப்புகள் ஏற்படுகிறது. சில வேலைகளில் அதிக ஆழமான வெடிப்புகள் ஏற்படுவதால் அந்த இடத்தில் மிகுந்த வலியுடனும் மற்றும் இரத்தம் வெளியேறும் வண்ணத்திலும் இருக்கும். பாதம், பாதத்தின் விலிம்புப்பகுதியில் உள்ள தோல் உறிந்து தகடுகள் போல் வெடித்துக் காணப்படுவது குதிகால் வெடிப்பு எனப்படும். குதிகால் வெடிப்பு ஏற்படக் காரணங்கள் : ♡ வறட்சி மற்றும் சுத்தமின்மையால் குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது. ♡ தொடர்ந்து காலணிகள் இன்றி நடப்பதால் ஏற்படுகிறது. ♡ அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதால்,பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ♡ அதிகம் நேரம் தண்ணீரில் இருந்தால் ஏற்படும். - இவ்வாறு இருப்பின், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

குதிகால் வலி உணவு முறைகள்

 உணவு முறைகள் ♡ கால்சியம் உள்ள உணவுகள், காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். அதாவது பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடிப்பதால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தைப் பெறமுடியும். ♡ ஒட்ஸ், தயிர், வெள்ளைக்காராமணி, பச்சைக் கீரைகள், பாதாம் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குதிகால் வலி வந்தபின் காக்கும் முறைகள்

 குதிகால் வலி வந்தபின் காக்கும் முறைகள் ♡ வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம்.  ♡ காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரணத் தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறிக் மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும். குதிகால் வலி குறையும். - இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

 குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள் ♡ சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவதை தடுக்கலாம். ♡ குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.  ♡ கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது. ♡ குதிகால் வலி உள்ளவர்கள் இதற்கென்றே உள்ள தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ♡ குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி சைக்கிள் ஓட்டும் பயிற்சி. ♡ உடல் பருமன் அதிகமாக இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும்.  ♡ குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. வீட்டுக்குள்ளும் காலணி அணிந்துதான் நடக்க வேண்டும். ♡ பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டும். ♡ அழுத்தமான ஷுக்களை அணியக்கூடாது. 

குதிகால் வலி

 குதிகால் வலி  குதிகால் வலி என்றால் என்ன? ♡ காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் சுள்ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். மேலும் ஓர் அங்குலம் கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது. மாடிப்படி ஏற முடியாது. இதற்கு குதிகால் வலி என்று பெயர்.  காரணங்கள் : ♡ குதிகால் எலும்பிலிருந்து பிளான்டார் அப்போநீரோசிஸ் (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்த திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.

முடி உதிர்தல்

முடி உதிர்தல் ♡ நம் தலையில் சுமார் 1,00,000 முடி இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவில் முடி உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும். ஆனால் எப்போது ஒருவருக்கு அளவுக்கு அதிகமான அளவில் தலைமுடி உதிர்கிறதோ, அப்போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. ♡ இந்நிலையை அலோப்பேசியா ஏரியேட்டா என்று அழைப்பர். இந்நிலை இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும். ஆனால் மீண்டும் முடி வளராமல் வழுக்கை ஏற்படும். பொதுவாக இப்பிரச்சனையால் 40 - 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  ♡ ஆயுர்வேதத்தில் பித்தம் உடலில் அதிகம் இருந்தால், தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும் என்று சொல்லப்படும். முடி உதிர்வை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி காண்போம். முடி உதிர்வதை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள் :  ♡ ஒரு கப் மருதாணி இலை, கடுக்காய் தோல் - 4, டீ டிகாக்ஷன் ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு கப், துளசி இலை - ஒரு கப், கொட்டை நீக்கிய நெல்லிக்காய் இவற்றை மிக்ஸியில் அரைத்து, வாரம் ஒரு முறை தலையில், சிறிது நல்லெண்ணெய் தடவிவிட்டு, இந்த பேஸ்ட்டை தலை முழ...

அல்சர் நோய் உணவு முறைகள்

உணவு முறைகள் ♡ இரண்டு மூன்று வாழைப்பழங்களைப் பாலுடன் சாப்பிட்டால் நல்லது. பச்சை வாழைப்பழம் மிகவும் சிறந்தது. ♡ நெல்லிக்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து குடிக்க குணமாகும். ♡ வில்வ பழங்கள் சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும். ♡ பாதாம் பால் அல்சருக்கு நல்லது. ♡ குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். ♡ உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்க வேண்டும். ♡ மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக குடிக்கலாம்.  ♡ அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும். ♡ அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சாப்பிட அல்சருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.  ♡ உலர்ந்த திராட்சைப் பழங்களை சேர்க்க வேண்டும்.

அல்சர் நோய் வந்தபின் காக்கும் முறைகள்

அல்சர் நோய் வந்தபின் காக்கும் முறைகள் ♡ ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு உணவு உட்கொள்ள வேண்டும். ♡ உணவில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். ♡ முதலில் நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ♡ வேகவைத்த பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும். ♡ அதிக இனிப்புப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் சேர்க்கக் கூடாது. ♡ மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள், உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. ♡ புண் குணமாக, எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும். ♡ வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும். ♡ மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது. ♡ பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.  - இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

அல்சர் நோய் வராமல் தடுக்கும் முறைகள்

 அல்சர் நோய் வராமல் தடுக்கும் முறைகள்  ♡ காலை உணவை தவிர்க்க கூடாது. ♡ நேரம்தவராமல் உணவு உண்ண வேண்டும். ♡ பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும். ♡ காய்கறிகளை ஒதுக்கக் கூடாது. ♡ மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும். ♡ விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சேர்க்கக் கூடாது. ♡ சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம். ♡ புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது.

அல்சர் நோய்

 அல்சர் நோய்  நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும். இந்த அமிலத்தால் ஏற்படுவதுதான் அல்சர் என்ற குடல் புண் ஆகும். அல்சரின் வகைகள்:   இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் என்றும் அழைக்கப்படும். அல்சர் ஏற்படுவது எதனால்? ♡ பொதுவாக நம் வயிற்றில் பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். ♡ நேரந்தவறி சாப்பிடுவதாலும், அதிகம் சூடாகச் சாப்பிடுவதாலும், பட்டினி கிடப்பதாலும் இரைப்பையில் புண்கள் வரும். ♡ புகைப்பிடித்தல், மது அருந்துதல், மென் குளிர்பானம், பானங்களை அதிகமாகக் குடிப்பது. ♡ மோசமான சுற்று சூழல், கலப்படம் செய்யப்பட்ட உணவு, அசுத்தமானக் குடிநீர்,ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா ஆகியவற்றால் குடல் புண் ஏற்படுகிறது. ♡ அதிகமான காரம் நிறைந்த உணவுப்பொருட்கள் உண்பது, புளிப்பு மிகுந்த, மசாலா கலந...

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?   அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும். புற்றுநோயின் வகைகள் : ♡ நுரையீரல் புற்றுநோய் ♡ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ♡ மார்பக புற்றுநோய் புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் : ♡ மூன்றுவிதமான சிகிச்சைகள் உள்ளன. ♡ அறுவை சிகிச்சை ♡ கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்), ♡ ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).

புற்றுநோய் வந்தபின் காக்கும் முறைகள்

புற்றுநோய் வந்தபின் காக்கும் முறைகள் ♡ மது, புகை பழக்கத்தை கைவிட வேண்டும். ♡ இரத்த சோகைக்கு உடனடி சிகிச்சை பெற வேண்டும். ♡ கூரான பற்களை சரிசெய்து, வாயை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ♡ சுகாதாரமான சூழ்நிலையில் வசிக்க வேண்டும். ♡ உறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.  ♡ உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.  ♡ பதப்படுத்திய உணவை தவிர்க்க வேண்டும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகள்

 புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகள் ♡ ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ♡ புகையிலை பயன்படுத்தக்கூடாது. ♡ கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம். ♡ முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும். ♡ காலை 10 மணியிலிருந்து 4 மணிவரை சூரிய ஒளி படாமல் தவிர்க்க வேண்டும். ♡ 40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து, உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

புற்றுநோய்

 புற்றுநோய் ♡ உடலுக்குள் மெல்ல மெல்ல உடலின் அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்பதாகும். ♡ உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது. ♡ புகையிலை உபயோகித்தல், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை, வாழ்க்கைமுறை ஆகியவை புற்றுநோய் வரக் காரணமாக இருக்கிறது. இத்தகைய மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வருகிறது. ♡ சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்றவை. ♡ பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

காய்ச்சல் தடுப்பு முறைகள்

தடுப்பு முறைகள் ♡ டைஃபாய்டு, மலேரியா, ஹெபடைடிஸ், அம்மை போன்றவற்றுக்கு முன்கூட்டியே தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டால் அந்த நோய் வராமல் தடுக்கலாம். ♡ வைட்டமின் மற்றும் மினரல் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை தினசரி உணவில் கட்டாயமாகச் சேர்த்துக்கொள்வதன் மூலம் தடுக்கலாம்.  ♡ காய்கறி, பழங்கள், கீரை போன்றவற்றை நன்றாகக் கழுவியே உபயோகிக்க வேண்டும்.  ♡ வாட்டர் ஃபில்டராக இருந்தாலும், கொதிக்க வைத்த தண்ணீர் தான் குடிக்க வேண்டும். ♡ ஃபாஸ்ட் ஃபுட் உணவு உண்பதை குறைப்பதன் மூலம் காய்ச்சலை தடுக்கலாம். 

காய்ச்சல்

 காய்ச்சல் ♡ காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல. அது ஒரு அறிகுறி. பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது, இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும். அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல்.  ♡ சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் காய்ச்சல் வந்தால் உடனடியாக பார்க்க வேண்டும். காய்ச்சலுக்கான காரணங்கள் : ♡ வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளின் காரணமாகவோ, கொசு, ஈ போன்றவற்றினால் நம் உடலில் உருவாகும் கிருமிகளின் பாதிப்பினாலோ காய்ச்சல் ஏற்படும். ♡ நம் உடலிலுள்ள சில மென்மையான கொலாஜன் திசுக்கள்,உடலில் சில நச்சுப் பொருட்களால் அழிக்கப்படும் போதும் காய்ச்சல் வரலாம்.  ♡ ஹெச்.ஐ.வி பாதித்தோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வரலாம்.  ♡ பெண்களுக்கு சிறுநீரகத் தொற்றின் காரணமாக காய்ச்சல் வரும்.  ♡ காசநோய் இருந்தாலும் காய்ச்சல் வரும். பொதுவாக காசநோய் என்பது இருமல் தான்....

மன அழுத்தம் உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்  ♡ தியானம், யோகா போன்றவற்றில் மனதை டுபடுத்த வேண்டும். ♡ ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் ஒன்று. ♡ மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன. ♡ அமைதியான குடும்பச் சு+ழல் பெரும் பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ♡ அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். ♡ குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம். ♡ புருவங்களின் மத்தியில் அழுத்தம் தரலாம். ♡ பின் கழுத்தில் அழுத்தம் தரலாம். ♡ நடைப்பயிற்சி நலம் தரும். ♡ கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தரலாம்.

மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகளால் பாதிக்கும் காரணிகள்

 மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகளால் பாதிக்கும் காரணிகள் ♡ ஒரு நபரின் மன அழுத்தம் தங்கும் திறன் கீழ்கண்ட ஒன்று அல்லது பலவித காரணிகளால் ஏற்படுமாதலால், நபருக்கு நபர் இத்திறன் வேறுபடுகிறது. ♡ஒரு நபரின் மன அழுத்தம் தாங்கும் திறன் காலகட்டங்களுக்கு தகுந்தவாறும் மாறுபடலாம். ♡ குழந்தைபருவ அனுபவங்கள் (கொடுமைகளால் அழுத்தம் தாங்கும் திறன் பாதிக்கப்படலாம்). ♡ நபர்களின் செயல்முறைகள் (சிலர் மற்றவரை விட அதிகம் பாதிக்கப்படலாம்). ♡ பரம்பரை (பரம்பரையாக வரும், குறிப்பாக மூளையின் முக்கிய இரசாயனமான செரட்டினின் அளவோடு தொடர்புடைய தாமத செயல்பாடு போன்றவை). ♡ நோய் எதிர்ப்புத்திறனில் வேறுபடுகள் (மூட்டு வலி, சொறி போன்ற குறைபாடுகளால் தாங்குதிறன் குறைகிறது). ♡ வாழ்க்கைமுறை (சத்தில்லாத உணவு மற்றும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறைகள்). ♡ மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தோன்றும் கால அளவு. நோயை எவ்வாறு கண்டறிவது ? மனவியல் நோய்களை தீர்க்கும் திட்டமுடிதலுக்கு, அந்நோய்களைப் பற்றிய முழு புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் (cortisol)...

மன அழுத்தம் வந்தபின் காக்கும் முறைகள்

 மன அழுத்தம் வந்தபின் காக்கும் முறைகள் ♡ எத்தகைய பதட்டத்தையும் தனித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேட்கலாம் அல்லது பாடலாம். ♡ மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழைத்து அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் அழுத்தம் குறையும். ♡ அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும். ♡ வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டும். ♡ நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும். ♡ நகைச்சுவை உணர்ச்சிதான் அழுத்தத்திற்கான உரிய மருந்தாகும். ♡ மன அழுத்தம் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம். ♡ தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். ♡ உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது மிகவும் நல்லது. ♡ செல்லப் பிராணிகள் இருந்தால் அதோடு விளையாடலாம்.

மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள்

 மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள்   ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால், அது மன அழுத்தமாக மாறிவிடும். முக்கிய காரணங்கள் :  வாழ்வியல் அழுத்தம் :  தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது. உள்நிலை அழுத்தம் :  இதனால் மக்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள். சுற்றுச்சூழல் அழுத்தம் :  சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால் ஏற...

மூட்டு வலி உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள் ♡ சூரிய நமஸ்காரம், திரிகோணாசனம், வஜ்ராசனம், யோக முத்ரா, மகாமுத்ரா, சலபாசனம், தனுராசனம், புஜங்கா சனம், போன்ற ஆசனப் பயிற்சிகள் மருந்துகளுடன் சேர்ந்து நோயை விரைவில் குணப்படுத்திட உதவும். ♡ எந்த வேலையையும் ஒரேயடியாகச் செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். ♡ அலுப்புத் தோன்றாமலிருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களின் இசையைக் கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம். ♡ எளிமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.

மூட்டு வலி உணவு முறைகள்

உணவு முறைகள் ♡ வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும். ♡ காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும்.  ♡ கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிட வேண்டும். ♡ கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். ♡ புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். ♡ பாசிப்பருப்பை சூப்பை நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட மூட்டு வலி குறையும்.  - இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

மூட்டுவலி வராமல் காக்கும் முறைகள்

 மூட்டுவலி வராமல் காக்கும் முறைகள் ♡ உடற்பயிற்சி செய்ய வேண்டும். ♡ எண்ணை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். ♡ கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ♡ மது, புகை பழக்கங்களை விட வேண்டும். ♡ நன்கு நேராக நிமிர்ந்து உட்கார, நிற்கப் பழக வேண்டும். ♡ நிற்கும் பொழுது பாதங்ளை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும்.

மூட்டு வலி

 மூட்டு வலி ♡ மூட்டு என்பது நமது முழங்கால்களில் இருப்பது மட்டும் இல்லை. தோள்பட்டை, முழங்கை, கழுத்து, இடுப்பு போன்ற அனைத்துமே மூட்டு வகைகள் தான். மூட்டு வலிக்கு முக்கியமான காரணம் நரம்பு அழுத்தம் அல்லது நரம்பு தூண்டல் தான் காரணமாக உள்ளது. ♡ வயிறு நிறைய உண்பது. ♡ தவறான உணவு பழக்கவழக்கம். ♡ அதிக அளவு எண்ணெய் உணவுப் பொருட்களைச் சாப்பிடுதல். ♡ அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்ளுதல். ♡ தொடர்சியான தூக்கமில்லாதிருத்தல்.  ♡ அதிக மனஅழுத்தம்.  ♡ அளவுக்கு அதிகமான கோபம். ♡ அதிக உடல் எடை. ♡ மது, புகை, போதைப் பொருட்கள் உட்கொள்ளுதல்.  ♡ வாயுத் தொல்லை உண்டாக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுதல். ♡ அதிக சர்க்கரை சேர்த்த இனிப்புகள், பானங்கள் குடித்தல். ♡ கால்சியம் சத்து குறைவாக இருத்தல். ♡ உடல் உழைப்பு இல்லாமை. ♡ மூட்டு தேய்மானம். ♡ இள வயதில் உடற்பயிற்சி செய்யாமை. மூட்டுவலி வராமல் தடுக்கும் முறைகள் : ♡ அதிக பழுதூக்குதலைத் தவிர்க்க வேண்டும். ♡ கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். ♡ ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தைக...

இடுப்பு வலி உடற்பயிற்சிகள்

 உடற்பயிற்சிகள் ♡ உட்கார்ந்திருக்கும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படியாகவும், முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கும்படி உட்கார வேண்டும். ♡ ஒரு வாரத்திற்கும் மேலாக உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். ♡ படுத்திருந்தபடி உங்கள் ஒரு முழங்காலை மடித்து நெஞ்சு வரை கொண்டு செல்வதாகும். முதலில் ஒரு காலில் செய்யுங்கள். பிறகு மற்றக் காலில் செய்யுங்கள். இறுதியாக இரண்டு கால்களையும் சேர்த்துச் செய்யுங்கள். பத்துத் தடவைகள் செய்யலாம். ♡ முதுகைப் பிற்புறமாக வளைப்பது மற்றொரு நல்ல பயிற்சியாகும். ♡ தோள்பட்டையை வலது புறமாகவும் இடதுபுறமாகவும் சாய்க்க வேண்டும்.

இடுப்பு வலி உணவு முறைகள்

 உணவு முறைகள் சேர்க்கவேண்டிய உணவுகள் : ♡ உணவில் முடக்கத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். ♡ வாயு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்த்து விடுவது நல்லது. ♡ கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். ♡ வெள்ளைப் பூண்டு இடுப்புவலியை பெருமளவு குறைத்துவிடும்.  தவிர்க்கவேண்டிய உணவுகள் :  ♡ பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம் போன்ற நோய்கள் வரக்காரணமான வறுத்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். ♡ உருளைக் கிழங்கு, பட்டாணி, காராமணி, வாழைக்காய், அதிக புளி, குளிர் பானங்கள் ஆகியவற்றை இடுப்புவலி நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.

இடுப்புவலி வந்தபின் காக்கும் முறைகள்

 இடுப்புவலி வந்தபின் காக்கும் முறைகள் ♡ அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் இடுப்பு வலி ஏற்படும். ♡ புகைப் பழக்கத்தை தவிர்த்துவிடுதல் நல்லது. ♡ உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்கக் கூடாது. - இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

இடுப்புவலி வராமல் தடுக்கும் முறைகள்

இடுப்புவலி வராமல் தடுக்கும் முறைகள் ♡ அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். ♡ சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். ♡ கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும். ♡ அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும். ♡ பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ♡ சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். ♡ தினசரி உற்சாகமாக உடல் உழைப்புடன் இயங்க வேண்டும் அல்லது உடற் பயிற்சி செய்ய வேண்டும். ♡ நாற்காலியில் அமரும்போது முதுகுப் புறமும், இடுப்புப் பகுதியும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள். ♡ நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் ஆபத்தை ஏற்படுத்தும்.

இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள்

இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள்  ♡ அதிகமான நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவலியால் அவதிப்படுவர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே அமர்ந்திருப்பதுதான். ♡ இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது.  ♡ முறையற்ற உடற்பயிற்சி. ♡ நீண்ட நேரம் அமர்ந்து பிரயாணம் செய்யும் போது இடுப்பு வலி ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. ♡ எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு. ♡ சரியாக குணப்படுத்தப் படாத வாயுக் கோளாறு. ♡ நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வதால் இடுப்பு வலி வருகிறது.

தொப்பையை குறைக்க டிப்ஸ்

தொப்பையை குறைக்க டிப்ஸ்!! எலுமிச்சை ஜூஸ் : 👉 தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து நாளடைவில் தொப்பையை மறைந்துவிடும். வெள்ளை சாதத்தை தவிர்க்கவும் : 👉 தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். தண்ணீர் குடிக்கவும் : 👉 பெல்லி குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும். இனிப்பு உணவுகளை தவிர்க்கவும் : 👉 இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு, உடல் எடை மற்றும் தொப்பை குறைவதில் தடையை உண்டாக்கும். பூண்டு சாப்பிடவும் : 👉 தினமும் காலையில் 2-3 ...

டயட்டில் இருக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியவை

 டயட்டில் இருக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியவை !! 👉 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லா வயதினரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனை உடல்பருமன் ஆகும். பல நோய்களுக்கு மூல காரணமாகும் இந்த உடல்பருமன் இந்தியாவில் அதிகளவில் அதிகரித்து வருகிறது. ஏதேதோ வழிகளில் உடல் பருமனை சரிசெய்ய இன்றைக்கு பலரும் முயன்று கொண்டிருக்கிறார்கள். உடல்பருமனை குறைப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். நம் உடலுக்குத் தேவையான கலோரிகளைவிட நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவு அதிக அளவில் இருப்பதால், உடல்பருமன் ஏற்படுகிறது. இப்போது டயட்டில் இருக்கும் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டியவை எவை என்று பார்ப்போம். கட்டாயம் செய்ய வேண்டியவை : 👉 முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒரு நாளைக்கு 800 முதல் 1,500 கலோரிகள் போதுமானது. அதாவது, ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு மடங்கு உணவை எடுத்துக்கொள்பவராக இருந்தால், அதை தவிர்த்து குறைவான கலோரிகள் உள்ள உணவை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். 👉 குறைவான கலோரி கொண்ட உணவுகளான பருப்புகள், கோதுமை, தானியங்கள், பழங்கள், வெள்ளரி, பாதாம் முதலியவை...

உணவை எப்படி சாப்பிட வேண்டும்

உணவை எப்படி சாப்பிட வேண்டும்? காலை : 👉 காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்கக்கூடாது. காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை இரண்டு - மூன்று இட்லி, நிறைய சாம்பார் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. 👉 காலையில் அதிகளவு உண்ணுவதோ, உணவை அறவே தவிர்ப்பதோ என்பது கூடாது. காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். மதியம் : 👉 மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், தயிர், காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இரவு : 👉 இரவு உணவாக சப்பாத்தி, காய்கறிக் கூட்டு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் பரோட்டா, நூடுல்ஸ் முதலான மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சாப்பிட வேண்டியவை

  உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சாப்பிட வேண்டியவை..!! காலிஃப்ளவர் : 👉 காலிஃப்ளவர் குறைவான கலோரிகள் கொண்டது. இதை அதிகம் உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. பூசணிக்காய் : 👉 உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பூசணிக்காய் முக்கிய பங்கு வகுக்கிறது. பூசணிக்காயின் விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கால்சியம், மினரல்ஸ், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஆகியன அடங்கியுள்ளன. பூசணிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பூசணிக்காயை தாராளமாக சாப்பிடலாம். ஸ்ட்ராபெர்ரி : 👉 ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. குறிப்பாக ஸ்ட்ராபெரி பழத்திற்கு ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் திறன் உண்டு. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். ஆரஞ்சுப் பழம் : 👉 ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும். தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ச...

உடல் எடை குறைய வழிகள்

 உடல் எடை குறைய வழிகள்!! காலை உணவின் மூலம் உடல் எடையை எப்படி குறைப்பது? 👉 காலை உணவை சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள மெட்டபாலிசத்தை எளிதாக தூண்ட முடியும். இது உடல் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது. காலையில் சாப்பிடும் அதே உணவை மாலையில் சாப்பிட்டாலும் கூட, இந்த அளவிற்கு மெட்டபாலிசத்தை தூண்ட முடியாது. 👉 பலர் காலை உணவை தவிர்த்துவிட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் மதியம் அதிகமாக பசி எடுக்கிறது. இதனால் மதிய உணவை அதிகமாக உட்கொண்டு விடுகிறார்கள். மாலை ஸ்நேக்ஸ் உடன் சேர்த்து காலை உணவை தவிர்த்தாலும் கூட அதிக உணவை சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. 👉 காலை உணவை தவிர்க்கும்போது உங்களது உடலில் பசிக்கான ஹார்மோன் அதிகமாக தூண்டப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. 👉 காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், உடலுக்கு தேவையான கார்போஹைட்ரைட்டுகள், புரோட்டின், கொழுப்பு, வைட்டமின் போன்ற இன்னும் சில சத்துக்களை இழக்கக்கூடும். 👉 உடல் எடையை குறைக்க நினைத்தால், வெறும் வயிற்றில் ஓட...

உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்

 உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்? 👉 நீங்கள் குண்டாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல. குறைவாகத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும் குண்டாகிறோமே என நீங்கள் யோசித்திருந்தால் காரணங்கள் வேறாக இருக்கலாம். 👉 உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை. இவைகளை சாப்பிடுவதை தவித்துக் கொள்ள வேண்டும். இவைகளை சாப்பிடுவதன் மூலம் 1 நாளில் கிடைக்க வேண்டிய கலோரிகள் சில மணி நேரத்திலே கிடைத்து விடுகிறது. 👉 அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது. மைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றையும் கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது. மென்று முழுங்கி சாப்பிட வேண்டும் : 👉 மென்று முழுங்காமல் அவசர அவசரமக உணவை முழுங்குவதால் உங்கள் ஜீரணத் தன்மை பாதிக்கும். இதனால் கொழுப்புகள்...

குளிர்காலம் உடுத்தும் ஆடைகள்

குளிர்காலம் உடுத்தும் ஆடைகள்  குளிர்காலம் - உடுத்தும் ஆடைகள் : 🌟 குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காயலாம். தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் வேண்டும். 🌟 பருத்தி ஆடைகளை அணியக் கூடாது. ஏனெனில் மழை காலத்திற்கு ஏற்றதாக இருக்காது. 🌟 இரவு நேரங்களில் கம்பளியாலான போர்வையை பயன்படுத்தலாம். 🌟 ஸ்வெட்டர், கையுறை, சாக்ஸ், தொப்பி போன்றவற்றை பயன்படுத்தலாம். 🌟 ஆடைகள் மொத்தமானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குளிரை தாக்கக்கூடியதாக இருக்கும்.

மழைக்காலம் உடுத்தும் ஆடைகள்

மழைக்காலம் உடுத்தும் ஆடைகள்  மழைக்காலம் உடுத்தும் ஆடைகள்:  🌟 மழைக்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளலாம். நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காயலாம். தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் வேண்டும். 🌟 பருத்தி ஆடைகளை அணியக்கூடாது. ஏனெனில் மழை காலத்திற்கு ஏற்றதாக இருக்காது. 🌟 இரவு நேரங்களில் கம்பளியாலான போர்வையை பயன்படுத்தலாம். 🌟 ஸ்வெட்டர், கையுறை, சாக்ஸ், தொப்பி போன்றவற்றை பயன்படுத்தலாம். 🌟 ஆடைகள் மொத்தமானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குளிரை தாங்கக்கூடியதாக இருக்கும். குறிப்பு : 🌟 மழைக்காலம் முழுவதும் ஒரே பெட்ஷிட், போர்வையைப் பயன்படுத்தக்கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ஷிட் மற்றும் போர்வையைத் துவைத்து, உலர்த்திப் பயன்படுத்த வேண்டும். 🌟 ஆடையை நன்றாகத் துவைத்து பகல் வேளையில் வெயிலில் உலர்த்தினால் தான் கிருமிகள் அழியும். 🌟 மழைக்காலத்தில் தினமும் இரண்டுமுறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். 🌟 சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வீட்டிலும், வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்கவிடக்கூடாது. வீட்டைச்சுற்றி அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் த...

கோடை காலம் உடுத்தும் ஆடைகள்

 கோடை காலம் உடுத்தும் ஆடைகள்  கோடை காலம் - உடுத்தும் ஆடைகள் : 🌟 கோடைகாலத்திற்கு பருத்தி ஆடை மிகவும் ஏற்றதாகும். 🌟 கோடைகாலத்தில் மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. 🌟 பருத்தியாலான புடவைகளை அணிய வேண்டும். 🌟 கோடைக்காலத்தில் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. ஏனெனில் கருப்பு நிறம் எளிதாக வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. 🌟 லினன் மற்றும் சணல் இழை ஆடைகள் அணியலாம். தளர்வான, மென்மையான நிறங்களை கொண்ட ஆடைகள் அணியலாம். கோடையில் வெள்ளைநிற ஆடைகளை அணிவதே நல்லது.